உன்னோடு பயணிக்க வேண்டுமடி
அசைந்தாடும் தேரோ.
ஆகாய வெண்நிலவோ.
மெருண்டோடும் பெண்மானோ.
மயிலே.............
உன்மாயை எனக்குப்புரியவில்லையடி.
மணம் வீசும் தென்றலோ.
வளைந்தோடும் நதியோ.
மெல்லிசை கொண்டு
பாடும் குயிலோ.
பனி மழை தூவும் கரு மேகமோ.
என் கண்ணில் படா
கானல் நீரோடி நீ.
என் கவிக்குள்
அடங்கா கயல்விழியே.
என் நெஞ்சை
கொள்ளை கொண்ட கள்ளியே.
காலம் பூராவும் நான்
உன்னோடு பயணிக்க வேண்டுமடி.
ஆகாய வெண்நிலவோ.
மெருண்டோடும் பெண்மானோ.
மயிலே.............
உன்மாயை எனக்குப்புரியவில்லையடி.
மணம் வீசும் தென்றலோ.
வளைந்தோடும் நதியோ.
மெல்லிசை கொண்டு
பாடும் குயிலோ.
பனி மழை தூவும் கரு மேகமோ.
என் கண்ணில் படா
கானல் நீரோடி நீ.
என் கவிக்குள்
அடங்கா கயல்விழியே.
என் நெஞ்சை
கொள்ளை கொண்ட கள்ளியே.
காலம் பூராவும் நான்
உன்னோடு பயணிக்க வேண்டுமடி.
அவள் நினைவில்
காட்டாறு போல ஓடுகிறது
என் நெஞ்சில் உன் நினைவுகள்
கடந்த காலத்தை நினைக்கையில்
அது கனம் பெற்ரு நோகிறது
கண்மூடும் முன்னே உன்
முகம் வந்து நிற்கிறது என் முன்னால்
விடிகின்ற பொழுதில் கூட உன்
புன்சிரிப்பைப் பார்க்கின்றேன் இப்போதும்
இரவுகள் நீழ்கின்றன
என் கனவில் நீ இருப்பதால்
பகல்கள் விரைகின்றன
என் நினைவில் நீ இருப்பதால்
தூங்க மறுக்குதடி என் கண்கள்
உண்ண மறுக்குதடி என் உதடுகள்
உன்னை நினைக்கையில் என்
சரீரமும் சாய்ந்து போகுதடி
ஏக்கங்கள் நிறைந்தாச்சு என் மனதில்
ஏனிந்த மாற்றமென
எண்ணி நான் பார்க்கையிலே என்
நெஞ்சில் நீதான் மிச்சமடி
கவி கொண்டு உனை வாழ்த்த
நான் கவிஞனல்ல என்
கண்கண்ட உன்னழகைப் பார்த்து
என் கைகூட முயல்கிறது கவியெழுத
பண்டய இலக்கியத்தில் நான்
படித்ததுண்டு பெண்ணின் அழகினை
அத்தனையும் பொய்யடி உன்
மெய்யழகு ஓங்கி நிற்கையிலே.
உன்னிடம் வீழ்ந்தேன்
இளங்காலைத் தென்றலோடு
இசையொன்று மீட்டிருந்தேன்.
இனியவளே உன் இதயத்தில்
இதமாய் நான் குடிகொள்ள.
இசையொன்று மீட்டிருந்தேன்.
இனியவளே உன் இதயத்தில்
இதமாய் நான் குடிகொள்ள.
என் இருவிழி கொண்டு உன்
மெய்யுரு பார்த்து மேனிசிலிர்த்தேன்.
அவ்விழி உன்னில் அன்பு கொண்டதால்
என் விழி மூடி உன்னிடம் வீழ்ந்தேன்.
மெய்யுரு பார்த்து மேனிசிலிர்த்தேன்.
அவ்விழி உன்னில் அன்பு கொண்டதால்
என் விழி மூடி உன்னிடம் வீழ்ந்தேன்.
சத்தங்கள் எல்லாம் சங்கீதமாகின.
சங்கதியெல்லாம் உன்கதிபாடின.
சுருதிகூட சுகமாய் மீட்டது.
சுந்தரியே.......உன்னால் சுகம் கண்டேனடி.
சங்கதியெல்லாம் உன்கதிபாடின.
சுருதிகூட சுகமாய் மீட்டது.
சுந்தரியே.......உன்னால் சுகம் கண்டேனடி.
வாழும் நாளில் உன்னோடு நான்
வசந்தங்கள் வகையின்றிப்பாடி
வையத்தில் வானுயரப்பறந்து
உன்மடியில் சாயவேண்டுமடி.
வசந்தங்கள் வகையின்றிப்பாடி
வையத்தில் வானுயரப்பறந்து
உன்மடியில் சாயவேண்டுமடி.
கவியெழுத வைக்குதடி
எண்ணங்கள் பல கோடி அதில்
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி
உன் அழகான கன்னத்தாலடி
ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி
என்னை மயக்கும் உன் கண்ணொளி
றோசாப்பூவின் இதழடி. என்னை
ஈர்க்கும் உன் உதட்டழகடி
காற்றில் கலக்கும் உன் பேச்சொலி
என்னைப்பாடவைக்கும் இசையடி
நீ சிணுங்கும் சிரிப்போ
சில்லறைச்சிதறலடி
கார்மேகக்கூட்டம் போலுள்ளதடி. உன்
கருங்கூந்தலின் தோகையழகடி. நான்
மாலை சூடப்போகும் உன் கழுத்தோ
நிறைகுடச்செம்பின் கலையழகடி
உன் நடையின் இடையழகோ
என்னை நிலைதடுமாற வைக்குதடி.
மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி
அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி
உன் அழகான கன்னத்தாலடி
ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி
என்னை மயக்கும் உன் கண்ணொளி
றோசாப்பூவின் இதழடி. என்னை
ஈர்க்கும் உன் உதட்டழகடி
காற்றில் கலக்கும் உன் பேச்சொலி
என்னைப்பாடவைக்கும் இசையடி
நீ சிணுங்கும் சிரிப்போ
சில்லறைச்சிதறலடி
கார்மேகக்கூட்டம் போலுள்ளதடி. உன்
கருங்கூந்தலின் தோகையழகடி. நான்
மாலை சூடப்போகும் உன் கழுத்தோ
நிறைகுடச்செம்பின் கலையழகடி
உன் நடையின் இடையழகோ
என்னை நிலைதடுமாற வைக்குதடி.
மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி
அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி
என் இதயத்தில் இடமுண்டு
என் கனவோடு கலந்துவிட்ட
கனிக்குயிலே நான்
கண்சிமிட்டும் வேளையில் நீ
கனதூரம் சென்றுவிட்டாய்.
என் நினைவின் நிலவாக
உனை எண்ணினேன்.
சுட்டெரிக்கும் சூரியனாய் நீ
என்னை விட்டெறிந்து போனாயடி.
கொட்டும் மழையிலும் உன்
பாதம்பட்டயிடமெல்லாம்
விட்டிடா நான் தொடர்ந்தேன்
உன்னடி சேர்வதற்கு.
உன்மனதை உருக்கி
என்மனதைத் திருடிவிட்டு
நீ மறைந்துபோன
மாயம்தான் என்னடி.
அன்பைப்பொழிந்து என்னை
அரவணைக்கும் வேளைதனில்
நீ என்னை அந்தரிக்கவிட்டுச் சென்றாய்
நான் அலையவில்லை உனைத்தேடி.
ஏற்றத்தாழ்வுதனைக் கொண்டு
என்னைத்தவற விட்டுப்போனாயடி
எரியவில்லை என்மனம் அது
தினம் உருகியது உனக்காக.
மரணிக்கும் மனிதனுள்
மரத்துப்போன மானிடன் நான்
நான் மரணித்தாலும் உன்
நினைவுகள் மடியாது என் நெஞ்சில்
நீ இறந்தாலும் இடுவதற்கு
என் இதயத்தில் இடமுண்டு
இறுதிவரை காத்திருக்கும் அது
என்றும் உனக்காக .
என்னவளே உன்னை
மண்டியிட்டுக் கேட்கின்றேன்.
மண்ணையாவது விட்டுவிடு
அது மௌனமாக வாழ.
ஆனந்தம் கொள்கின்றேன்
அன்பே
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
தேயும் நிலாக்கூட
தினசரி வந்து போகும் உன்
பிறைபோல் நெற்றி பார்க்க
சிகரம்கூட சரிந்து பார்க்கும் உன்
சிரிப்பொலி கேட்டால்
சத்தமில்லாது நீ நடந்து போகையில்
மண்கூட முத்தம் தருமடி
காற்றில் உன் மூச்சுப்படுவதால் அது
தென்றலாய் மணம் வீசுதடி
கானகியே
நீ பாடும் குரல் கேட்டு
குயில்கூட தன் குரல் மற்ந்துபோச்சடி
ஆடும் மயில்கூட தன்
ஆட்டமிழந்து அந்தரிக்குதடி
ஆசை நாயகியே
ஆனந்தம் கொள்கின்றேனடி உன்
அழகினை இவர்கள் புரிந்து கொண்டதால்
அன்பே
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
தேயும் நிலாக்கூட
தினசரி வந்து போகும் உன்
பிறைபோல் நெற்றி பார்க்க
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
தேயும் நிலாக்கூட
தினசரி வந்து போகும் உன்
பிறைபோல் நெற்றி பார்க்க
சிகரம்கூட சரிந்து பார்க்கும் உன்
சிரிப்பொலி கேட்டால்
சத்தமில்லாது நீ நடந்து போகையில்
மண்கூட முத்தம் தருமடி
சிரிப்பொலி கேட்டால்
சத்தமில்லாது நீ நடந்து போகையில்
மண்கூட முத்தம் தருமடி
காற்றில் உன் மூச்சுப்படுவதால் அது
தென்றலாய் மணம் வீசுதடி
கானகியே
நீ பாடும் குரல் கேட்டு
குயில்கூட தன் குரல் மற்ந்துபோச்சடி
தென்றலாய் மணம் வீசுதடி
கானகியே
நீ பாடும் குரல் கேட்டு
குயில்கூட தன் குரல் மற்ந்துபோச்சடி
ஆடும் மயில்கூட தன்
ஆட்டமிழந்து அந்தரிக்குதடி
ஆசை நாயகியே
ஆனந்தம் கொள்கின்றேனடி உன்
அழகினை இவர்கள் புரிந்து கொண்டதால்
ஆட்டமிழந்து அந்தரிக்குதடி
ஆசை நாயகியே
ஆனந்தம் கொள்கின்றேனடி உன்
அழகினை இவர்கள் புரிந்து கொண்டதால்
தேவியர்களை மிஞ்சியவள்
ஓ...............பிரம்மா.
நீ படைத்த மனித சிற்பங்களில்
என்பார்வை ஏன்
இவள் பக்கம் மட்டும் சென்றது.
என்கண்ணில் இவள் குடிகொண்டு
என் இதயத்தை திருடிவிட்டதாலா.
தீண்டும் இவள் பார்வை
தினம் என்னைக் கொல்லுவதாலா.
உளி கொண்டு இவளை வடித்தாயா.
உன் உள்ளத்தின் குமுறலை வெளிக்கொண்டாயா.
உருகிநிற்கின்றேன் இப்போ
உன் உள்நோக்கம் தெரியாமல்.
அஞ்சிக்கொண்டு அவளருகே சென்றேன்.
கொஞ்சிநான் கொஞ்சம் விளையாடுவதற்காக.
மிஞ்சி நின்றாள் அழ்குத்தேவதையவள்.
தேவலோக தேவியர்களை விட.................
ஓ...............பிரம்மா.
நீ படைத்த மனித சிற்பங்களில்
என்பார்வை ஏன்
இவள் பக்கம் மட்டும் சென்றது.
என்கண்ணில் இவள் குடிகொண்டு
என் இதயத்தை திருடிவிட்டதாலா.
தீண்டும் இவள் பார்வை
தினம் என்னைக் கொல்லுவதாலா.
உளி கொண்டு இவளை வடித்தாயா.
உன் உள்ளத்தின் குமுறலை வெளிக்கொண்டாயா.
உருகிநிற்கின்றேன் இப்போ
உன் உள்நோக்கம் தெரியாமல்.
அஞ்சிக்கொண்டு அவளருகே சென்றேன்.
கொஞ்சிநான் கொஞ்சம் விளையாடுவதற்காக.
மிஞ்சி நின்றாள் அழ்குத்தேவதையவள்.
தேவலோக தேவியர்களை விட.................
நீ படைத்த மனித சிற்பங்களில்
என்பார்வை ஏன்
இவள் பக்கம் மட்டும் சென்றது.
என்கண்ணில் இவள் குடிகொண்டு
என் இதயத்தை திருடிவிட்டதாலா.
தீண்டும் இவள் பார்வை
தினம் என்னைக் கொல்லுவதாலா.
உளி கொண்டு இவளை வடித்தாயா.
உன் உள்ளத்தின் குமுறலை வெளிக்கொண்டாயா.
உருகிநிற்கின்றேன் இப்போ
உன் உள்நோக்கம் தெரியாமல்.
அஞ்சிக்கொண்டு அவளருகே சென்றேன்.
கொஞ்சிநான் கொஞ்சம் விளையாடுவதற்காக.
மிஞ்சி நின்றாள் அழ்குத்தேவதையவள்.
தேவலோக தேவியர்களை விட.................
நீ என்னவள்தானடி
கோடி மின்னல்போல் தினம்
என்னைத்தேடிவரும் உன்பார்வையால்
என்னையே உன்னிடம் தந்தேனடி.
ஏழையிவன் வாழ்வில் ஒளி
தீபமதை ஏற்றுவாயென இருந்தேனடி.
என் நினைவை மறந்து தினம்
உன்நினைவில் வாழ்ந்தேனடி.
என்னவளே.
நீ என்னோடு பழகிய சுவடுகள்
இன்றும் என்னுள் சுரக்குதடி.
மன்னவளே.
மணம் கொண்டு மன்னவளாக நீ வாழ்ந்தாலும்
என்னவளே என்னாளும் நீ என்னவள்தானடி.
என்னருகில் நீ இல்லையென்றாலும் தினம்
என்நினைவில் என்னுள் வாழ்கின்றாயடி.
தவம் செய்து உன்னையடைந்தேனடா இது
அன்று நீ சொன்ன தாரகை மந்திரம்.
இன்று தனியே என்னைத்தவிக்கவிட்டாயடி.
பொன்னவளே.
உன்னைப்பொன்னால் பூசித்துக்கொள்ள
என்னால் முடியாதென்று பொன்
பேராசை உனைப்பேர்த்துச்சென்றது.
பெண்ணவளே.
பேசாது நீ இருந்திருந்தால் என்
மார்பில் உனைத்தாங்கி நான்
எந்நாளும் மகிழ்ந்திருப்பேனடி.
மன்னவளே.
இப்போ மாற்றான் மனைவியே.
இந்நாள் வரை பூசிக்கின்றேன்
உன்நினைவை என்நெஞ்சில்.
உயிர் உள்ளவரை உன் நினைவினில்
உனக்காக வாழ்ந்து உயிர் துறப்பேனடி...............
என்னைத்தேடிவரும் உன்பார்வையால்
என்னையே உன்னிடம் தந்தேனடி.
ஏழையிவன் வாழ்வில் ஒளி
தீபமதை ஏற்றுவாயென இருந்தேனடி.
என் நினைவை மறந்து தினம்
உன்நினைவில் வாழ்ந்தேனடி.
என்னவளே.
நீ என்னோடு பழகிய சுவடுகள்
இன்றும் என்னுள் சுரக்குதடி.
மன்னவளே.
மணம் கொண்டு மன்னவளாக நீ வாழ்ந்தாலும்
என்னவளே என்னாளும் நீ என்னவள்தானடி.
என்னருகில் நீ இல்லையென்றாலும் தினம்
என்நினைவில் என்னுள் வாழ்கின்றாயடி.
தவம் செய்து உன்னையடைந்தேனடா இது
அன்று நீ சொன்ன தாரகை மந்திரம்.
இன்று தனியே என்னைத்தவிக்கவிட்டாயடி.
பொன்னவளே.
உன்னைப்பொன்னால் பூசித்துக்கொள்ள
என்னால் முடியாதென்று பொன்
பேராசை உனைப்பேர்த்துச்சென்றது.
பெண்ணவளே.
பேசாது நீ இருந்திருந்தால் என்
மார்பில் உனைத்தாங்கி நான்
எந்நாளும் மகிழ்ந்திருப்பேனடி.
மன்னவளே.
இப்போ மாற்றான் மனைவியே.
இந்நாள் வரை பூசிக்கின்றேன்
உன்நினைவை என்நெஞ்சில்.
உயிர் உள்ளவரை உன் நினைவினில்
உனக்காக வாழ்ந்து உயிர் துறப்பேனடி...............
No comments:
Post a Comment