Friday, 2 January 2015

கால மாற்றம்


தாகம் கொண்டு 
தேசம் கடந்தோம் இன்று
தேகம் நொந்து 
தாகம் கொண்டோம் இது 
காலத்தின் விதியோ....

மாலைக்கதிரவன்
மண்ணில் தொடும்வரை
வாலைக்கிழப்பும் எருதோடு
பழகிய நாம். இன்று...
மூக்கை சுழிக்கும் 
வெள்ளையனுடன்....

உழுதுண்டு வாழ்ந்த
வரலாற்றுப் பரம்பரை நாம் இன்று
பழுதுண்டு பாழாகிப்போனதேன்.
மனதோடு பேசாது
தெழிவாகப் பேசி மகிழ்ந்துண்ட நாம்
இன்று கைபேசியூடே
காலம் கழிவது வேதனை....

ஆளுக்கொரு பேசியூடு
அவரவர் மூலையிலே....
பசியோ நித்திரையோ அட
அது என்னவென தெரியாத பலர்
இங்கு இப்படித்தான் வாழ்க்கை....

வெளிநாட்டில் நம் தாய்மொழி தான்
பேசிடார் என்றால்.... இனி
வரும் காலத்தில் பேசிடத் தான்
மறந்திடுவார்....


No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews