Friday, 29 November 2013

கவியெழுத வைக்குதடி

எண்ணங்கள் பல கோடி அதில் 
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி 
உன் அழகான கன்னத்தாலடி 

ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி 
என்னை மயக்கும் உன் கண்ணொளி 
றோசாப்பூவின் இதழடி. என்னை 
ஈர்க்கும் உன் உதட்டழகடி 

காற்றில் கலக்கும் உன் பேச்சொலி 
என்னைப்பாடவைக்கும் இசையடி 
நீ சிணுங்கும் சிரிப்போ 
சில்லறைச்சிதறலடி 

கார்மேகக்கூட்டம் போலுள்ளதடி. உன் 
கருங்கூந்தலின் தோகையழகடி. நான் 
மாலை சூடப்போகும் உன் கழுத்தோ 
நிறைகுடச்செம்பின் கலையழகடி 

உன் நடையின் இடையழகோ 
என்னை நிலைதடுமாற வைக்குதடி. 
மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி 
அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews