புத்தாண்டே புத்தாண்டே உன்
புதுவரவு மிக்கதே...மிக்கதே.
எத்தனை நாள் காத்திருந்தேன்
நித்திரையில் நீ உதித்தாயே..
இன்பங்கள் பெருகிடவும்
துன்பங்கள் விலகிடவும்
தூய்மையாய் நாம் தழைத்திடவும்
தாய்மையென நீ நின்றிடுவாய்.
அன்பென்னும் சோலைதனில்
பண்பாக வாழ்ந்திடவே நீ
பாரினிலே உதித்தநாள்
பவனியிலே அது நல்லநாள்.
ஒன்றாக நின்றிடுவோம்
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
நன்றாக பிறந்துவிட்டாய்
நல்லரதுவே நடக்கட்டும்.
நாமெல்லாம் உனை போற்றிடுவோம்
புத்தாண்டே புத்தாண்டே...

No comments:
Post a Comment