Friday, 2 January 2015

சாயல்

இருளைக் கலைத்த நிலவே... நீ
பகலில் கலைந்த மாயமென்ன.
மௌனம் தேடித்திரியும் மனமே... உன்
கவனம் எல்லாம் எங்கே?
சலனம் அற்றுப்போகும் போது
ஜனனம் ஒன்று உண்டு...

கவிதை பாடும் குயிலே... உன் 
காலை வணக்கம்தான் என்ன.
மலரைத்தேடும் வண்டே... நீயும்
மௌனமாகிப்போகாதே...
இரையைத்தேடும் மயிலே... உன்
அழகை கொஞ்சம் தாவேன்... அவள்
களையைக்கொஞ்சம் நான்
கலையக்கண்டேன்

விழிகள் தூங்கும் போதும்
ஒளிகள் அங்கு உண்டு... என்
செவிகள்  விழங்கிகொள்ளும்... உன்
விழிகள் பேசிய மொழிகள்தனை...
கவியில் கூடகொண்டேன் அதை
கவனமாக கணிசம் கொண்டு


No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews