Friday, 29 November 2013

தேவியர்களை மிஞ்சியவள்

ஓ...............பிரம்மா. 
நீ படைத்த மனித சிற்பங்களில் 
என்பார்வை ஏன் 
இவள் பக்கம் மட்டும் சென்றது. 

என்கண்ணில் இவள் குடிகொண்டு 
என் இதயத்தை திருடிவிட்டதாலா. 
தீண்டும் இவள் பார்வை 
தினம் என்னைக் கொல்லுவதாலா. 

உளி கொண்டு இவளை வடித்தாயா. 
உன் உள்ளத்தின் குமுறலை வெளிக்கொண்டாயா. 
உருகிநிற்கின்றேன் இப்போ 
உன் உள்நோக்கம் தெரியாமல். 

அஞ்சிக்கொண்டு அவளருகே சென்றேன். 
கொஞ்சிநான் கொஞ்சம் விளையாடுவதற்காக. 
மிஞ்சி நின்றாள் அழ்குத்தேவதையவள். 
தேவலோக தேவியர்களை விட.................

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews