சாவுவந்து ஒரு சரித்திரத்தை
சரித்த செய்தி கேட்டு. என்
சரீரமும் சரிந்ததே....
தென்கோடி இனத்தில்
முன்கோடி எனக்கில்லை
என்கோடி மக்கள்தான் என
எடுத்துரைத்து எழுந்தவனே.
கறுப்பினத்தில் உதித்த
வெண்நெஞ்சுக்காறனே...
நெல்சன்மண்டேலா
வெள்ளையன் உன்னை
வெளுத்தபோதும் நீ
அழுக்காகாது மிடுக்காகிக்கொண்டு
அடிமைதனை உடைத்தாய்.
இருபத்தைந்து ஆண்டு
சிறைவாசம்தானோ... இன்று
எல்லோர் மனவாசத்திலும்
நீ வாழ்கின்றாய்...
அமைதியின் சின்னமே
மண்டேலா...... நீ
மடியவில்லை.
மரணம்தான் மடிந்தது.
முடிந்து போகாது உன்கதை
வரலாற்று ஏடுகளில்
உன் வாழ்வு
ஒவ்வொரு படிக்கற்களாக அமையும்..!

No comments:
Post a Comment