கோடைகாலம் பிறந்தாச்சு
ஆடைகளும் குறைந்தாச்சு
மாடல் என்ற பேரில் எம்
மண்வாசமும் போயாச்சு
ஊரைவிட்டு வந்தோமடா
கோடைகாலம் வந்தால் எம்மை
ஊருக்கே இழுக்குதடா.... இங்கு
வாடை இன்றி போனாலும் தினம்
வாசனைத் திரவியம் கேட்குதடா
ஏரியில்லா ஊரானாலும் நல்
ஏசிபோல காற்றெடுக்க நல்
மரம்தான் அங்குண்டு. இங்கு
காற்றெடுக்க கடற்கரை போனால்
கரைநெடுகே.......!
உறுதியெடுத்துக் கொள்வோம். நீர்
ஊற்றெடுக்கும் எம்மூரில் தினம்
கழித்திடுவோம் கோடையென்னும்
விடுமுறையை......!

No comments:
Post a Comment