Friday, 2 January 2015

கோடைகாலம்


கோடைகாலம் பிறந்தாச்சு
ஆடைகளும் குறைந்தாச்சு
மாடல் என்ற பேரில் எம்
மண்வாசமும் போயாச்சு

ஊரைவிட்டு வந்தோமடா
கோடைகாலம் வந்தால் எம்மை
ஊருக்கே இழுக்குதடா.... இங்கு
வாடை இன்றி போனாலும் தினம்
வாசனைத் திரவியம் கேட்குதடா

ஏரியில்லா ஊரானாலும் நல்
ஏசிபோல காற்றெடுக்க நல்
மரம்தான் அங்குண்டு. இங்கு
காற்றெடுக்க கடற்கரை போனால்
கரைநெடுகே.......!

உறுதியெடுத்துக் கொள்வோம். நீர்
ஊற்றெடுக்கும் எம்மூரில் தினம்
கழித்திடுவோம் கோடையென்னும்
விடுமுறையை......!



No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews