Friday, 29 November 2013

அவள் நினைவில்

காட்டாறு போல ஓடுகிறது
என் நெஞ்சில் உன் நினைவுகள்
கடந்த காலத்தை நினைக்கையில்
அது கனம் பெற்ரு நோகிறது
 
கண்மூடும் முன்னே உன்
முகம் வந்து நிற்கிறது என் முன்னால்
விடிகின்ற பொழுதில் கூட உன்
புன்சிரிப்பைப் பார்க்கின்றேன் இப்போதும்
 
இரவுகள் நீழ்கின்றன 
என் கனவில் நீ இருப்பதால்
பகல்கள் விரைகின்றன
என் நினைவில் நீ இருப்பதால்
 
தூங்க மறுக்குதடி என் கண்கள்
உண்ண மறுக்குதடி என் உதடுகள்
உன்னை நினைக்கையில் என்
சரீரமும் சாய்ந்து போகுதடி
 
ஏக்கங்கள் நிறைந்தாச்சு என் மனதில்
ஏனிந்த மாற்றமென
எண்ணி நான் பார்க்கையிலே என்
நெஞ்சில் நீதான் மிச்சமடி
 
கவி கொண்டு உனை வாழ்த்த
நான் கவிஞனல்ல என்
கண்கண்ட உன்னழகைப் பார்த்து
என் கைகூட முயல்கிறது கவியெழுத
 
பண்டய இலக்கியத்தில் நான்
படித்ததுண்டு பெண்ணின் அழகினை
அத்தனையும் பொய்யடி உன் 
மெய்யழகு ஓங்கி நிற்கையிலே.

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews