கண் மூட முடியவில்லை
கண்மணியே... தினம்
கண்ணில் உன் உருவம்.
காதோரம் கேட்கின்ற இசையில்
கனிவான உன் குரல் கீதம்....
பணிவான உன் நடைதூரம்
பகல் நிலா காயும் என் தேகம்.....
விடை காண முடியா ஒரு
வினாப்போல தினம் என்னுள்
விளையாடிச் செல்கின்றாய்.
உரையாடத் துடிக்கும் என் உதட்டை
விரையாக்கிச் செல்லாதே..
இது விளையாடும் நேரமில்லை
என் விழி நீர் சொரியுதடி
விடுகதையே போதுமடி
விதிப்படி நடக்கட்டும்.....
No comments:
Post a Comment