Friday, 2 January 2015

மனமிரங்கி வாராயோ


உள்ளம் நிறைவு கொண்டேன்
உன்னைக் கண்டதால் என் 
எண்ணங்கள் கோடி கோடியாய்
முளைத்தெழுந்து கவிகளாகின இது
காதலின் வெளிப்பாடோ. இல்லை
உன்னை கண்டதின் நிலைப்பாடோ...

உன் மௌனப் பார்வையால்
என்னுள் முளைத்த வரிகள்
வார்த்தைகளாயின.
குயிலின் பாடல் தேடி 
அலைந்தவன் நான்.
உன் நாணல் பார்வையால் 
ஓரம் கொண்டு. உன் 
சாரல் தேடிக்கொண்டவன்...

காதலென்னும் வீதியிலே உன் 
கைகோர்த்து நடைபயிலும்
சிறுபிள்ளை நானானேன். உன்
இடையோர நீழ் கூந்தலில்
வசையுண்டு போன சிறு
வண்டாகிப்போனேன் சில வேளை. ..

மதிமயங்கி போகின்றேன். 
மனமிரங்கி வாராயோ....
சிறகிழந்த புள்ளாகி
தரையிறங்கி கொள்கின்றேன்...


No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews