Friday, 29 November 2013

நீ என்னவள்தானடி

கோடி மின்னல்போல் தினம்
என்னைத்தேடிவரும் உன்பார்வையால்
என்னையே உன்னிடம் தந்தேனடி.
ஏழையிவன் வாழ்வில் ஒளி
தீபமதை ஏற்றுவாயென இருந்தேனடி.
என் நினைவை மறந்து தினம் 
உன்நினைவில் வாழ்ந்தேனடி.
என்னவளே.
நீ என்னோடு பழகிய சுவடுகள்
இன்றும் என்னுள் சுரக்குதடி.
மன்னவளே.
மணம் கொண்டு மன்னவளாக நீ வாழ்ந்தாலும்
என்னவளே என்னாளும் நீ என்னவள்தானடி.
என்னருகில் நீ இல்லையென்றாலும் தினம்
என்நினைவில் என்னுள் வாழ்கின்றாயடி.
தவம் செய்து உன்னையடைந்தேனடா இது
அன்று நீ சொன்ன தாரகை மந்திரம்.
இன்று தனியே என்னைத்தவிக்கவிட்டாயடி.
பொன்னவளே.
உன்னைப்பொன்னால் பூசித்துக்கொள்ள
என்னால் முடியாதென்று பொன்
பேராசை உனைப்பேர்த்துச்சென்றது.
பெண்ணவளே.
பேசாது நீ இருந்திருந்தால் என்
மார்பில் உனைத்தாங்கி நான்
எந்நாளும் மகிழ்ந்திருப்பேனடி.
மன்னவளே.
இப்போ மாற்றான் மனைவியே.
இந்நாள் வரை பூசிக்கின்றேன்
உன்நினைவை என்நெஞ்சில்.
உயிர் உள்ளவரை உன் நினைவினில்
உனக்காக வாழ்ந்து உயிர் துறப்பேனடி...............

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews