மேகத்தின் சாயலில்
மறைந்திருக்கும் உன்
மோகத்தால் என்
தேகம் சிலிர்க்குதடி...!
தாகம் தீர்க்கும் தடாகமோ _நீ
எனை தானம் கொண்ட தாரகையே.
ஞானம் பிறக்குதடி..என்னவளே உன்
நாணம் காண்கையில்.
வானம் சிவக்கும் மாலை. நீ
என் வாசல் வந்த பாவை.
சோலை வனம் கொண்ட உன்
தோகை. அதில் சரமாலை அணியும்
சேவகனோ நான்.
வாகை சூடும் நேரமாச்சு இனி என்
வாழ்வினிலும் சாரமாச்சு.
நாளி போகுதடி என் இதயமும்
நழுவுதடி..
No comments:
Post a Comment