Friday, 2 January 2015

அவளின் சாயல்


சாலையோரம் உன் 
சலங்கையின் கீதம். என் 
காதினூடே கவலையின் நீக்கம்
மாலை மேகக் கூட்டம் உன்
மடியினில் நான் தலைசாயும்
கோலம்.....!

அந்திவானம் உன் அழகின் சாயல்
பிந்திப்போனால் பிரினவின் சோகம
மங்கிப்போன இருளில் உன்
மகிமைக் கோலம் என் மனதை
அள்ளும் அருமைக்காலம்.

நிலவின் சாயல் உன் நெற்றி
நிகழ்காலம் அதுவே வெற்றி.
முதுமைக்காலம் முன்னே
உன் மகிமை வேண்டும் பெண்ணே....இனி
இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம்
உன் விழிகள் காணும் அவைகள் சொல்ல

எதுகைமோனை கொண்டேன்
எதிலும் உன்னைக்கண்டேன்
அதிலும் கூடக்கண்டேன்
உன் அழகின் பெருமைதன்னை...!


No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews