ஏர் பிடிக்கும் உழவர் நாம்
இயலாது படுத்திருந்தால்
இமைகூட ஆடாது இவ்வுலகில்
இன்றைக்கும் நாமிங்கு
இயந்திரமாய் இயங்குவதால்
இனிதாக இயங்குகின்றது இவ்வுலகு.
கணிணியிலே நீரெல்லாம் மூழ்கையிலே
களனியிலே நாமிங்கு மூழ்கின்றோம்
களையெடுத்து நாமிங்கு கருகையிலே
கன விலைக்கொடுத்து வெளிநாடு போகின்றீர்
தரப்புழுதியிலே நாமிங்கு நிற்கின்றோம்
மின் விசிறியிலே நீரெல்லாம் இருக்கின்றீர்
விண்ணுக்குள் நீரெல்லாம் செல்கின்றீர்
மண்ணுக்குள் தண்ணீர் விட்டு மக்களை நாம் காக்கின்றோம்.
விற்பனையில் நமக்கெல்லாம் தரக்குறைவு
விலைவாசியால் உமக்கென்ன பெருங்குறைவு
வீணாகப்போகின்றது எம் விளை நிலம்
வீண்பாகப் போகின்றது உம் நிலை
எம் நிலமை பாராது நீர்சென்றால்
பார்கூடப்பாழாகும் சொல்கின்றோம்
போராடு எமக்காக நீயும் புது
பொலிவோடு நாமிங்கு வாழ்வோம் ஒன்றாக........
இயலாது படுத்திருந்தால்
இமைகூட ஆடாது இவ்வுலகில்
இன்றைக்கும் நாமிங்கு
இயந்திரமாய் இயங்குவதால்
இனிதாக இயங்குகின்றது இவ்வுலகு.
கணிணியிலே நீரெல்லாம் மூழ்கையிலே
களனியிலே நாமிங்கு மூழ்கின்றோம்
களையெடுத்து நாமிங்கு கருகையிலே
கன விலைக்கொடுத்து வெளிநாடு போகின்றீர்
தரப்புழுதியிலே நாமிங்கு நிற்கின்றோம்
மின் விசிறியிலே நீரெல்லாம் இருக்கின்றீர்
விண்ணுக்குள் நீரெல்லாம் செல்கின்றீர்
மண்ணுக்குள் தண்ணீர் விட்டு மக்களை நாம் காக்கின்றோம்.
விற்பனையில் நமக்கெல்லாம் தரக்குறைவு
விலைவாசியால் உமக்கென்ன பெருங்குறைவு
வீணாகப்போகின்றது எம் விளை நிலம்
வீண்பாகப் போகின்றது உம் நிலை
எம் நிலமை பாராது நீர்சென்றால்
பார்கூடப்பாழாகும் சொல்கின்றோம்
போராடு எமக்காக நீயும் புது
பொலிவோடு நாமிங்கு வாழ்வோம் ஒன்றாக........
No comments:
Post a Comment