உன் காதோரம் வருடும் கூந்தலோடு
கவிபாட எண்ணுகின்றேன்...பெண்ணே!
உன் நினைவோடு வாழும்
மன்னவனும் நானே.....!
குயில் பாடும் குரலேதும் கேளேன் நீ
குரைத்தாலும் அது இசையாகும் தேனாய்....
கவியாலே உனைப்பாட இயலா தினம்
கவியாக நீ வாழ்கின்றாய் என் உயிராய்.
மலராக உன்னைக்காண வேண்டும் தினம்
உன் மனதோடு நான் உரையாட வேண்டும்.
No comments:
Post a Comment