கண்ணிமையில் நீ தூசாக...
கண்ணிமைக்க முடியாமல்
கண்கலங்கி கொள்கின்றேன்
கண்மணியே உனக்காக...
என் நினைவில் தினம். நீ
தீயாக கொதித்தாலும்.
உன் நினைவுதனை என்னால்
ஆற்றிடத்தான் முடியாது.
இதயம் தடம் மாறியது போல்
அதன் துடிப்பும்......
இத்தனைக்கும் நடுவில்
உன் நினைவுகளோடு
போராடும் என் நாளங்கள்.
தினசரி நீழும் கனவுக்காலங்கள்
கடினமாய்ப் போனாலும்.....
கரைசேரா ஒரு படகைப்போல்.
காத்திருக்கும் என் மனது
என்றும் உன் வருகைக்காக
காத்திருக்கும்.....
No comments:
Post a Comment