Friday, 29 November 2013

என் இதயத்தில் இடமுண்டு

என் கனவோடு கலந்துவிட்ட 
கனிக்குயிலே நான் 
கண்சிமிட்டும் வேளையில் நீ 
கனதூரம் சென்றுவிட்டாய். 

என் நினைவின் நிலவாக 
உனை எண்ணினேன். 
சுட்டெரிக்கும் சூரியனாய் நீ 
என்னை விட்டெறிந்து போனாயடி. 

கொட்டும் மழையிலும் உன் 
பாதம்பட்டயிடமெல்லாம் 
விட்டிடா நான் தொடர்ந்தேன் 
உன்னடி சேர்வதற்கு. 

உன்மனதை உருக்கி 
என்மனதைத் திருடிவிட்டு 
நீ மறைந்துபோன 
மாயம்தான் என்னடி. 

அன்பைப்பொழிந்து என்னை 
அரவணைக்கும் வேளைதனில் 
நீ என்னை அந்தரிக்கவிட்டுச் சென்றாய் 
நான் அலையவில்லை உனைத்தேடி. 

ஏற்றத்தாழ்வுதனைக் கொண்டு 
என்னைத்தவற விட்டுப்போனாயடி 
எரியவில்லை என்மனம் அது 
தினம் உருகியது உனக்காக. 

மரணிக்கும் மனிதனுள் 
மரத்துப்போன மானிடன் நான் 
நான் மரணித்தாலும் உன் 
நினைவுகள் மடியாது என் நெஞ்சில் 

நீ இறந்தாலும் இடுவதற்கு 
என் இதயத்தில் இடமுண்டு 
இறுதிவரை காத்திருக்கும் அது 
என்றும் உனக்காக . 

என்னவளே உன்னை 
மண்டியிட்டுக் கேட்கின்றேன். 
மண்ணையாவது விட்டுவிடு 
அது மௌனமாக வாழ.

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews