Friday, 2 January 2015

என்னவள்

சிலவேளை சிலநொடி
அவள் நடையோடு...!
தினம் விளையாடும் என் இதயம்
அதை களவாடும் பொழுதாய்
கனவாக்கிக்கொள்ளும்.

எழிதாய் கிடைத்திடா...!
எழில் வண்ணக்கிளியாய்
ஒளியாய் என் இதயத்தில
மிளிர்ந்தாள்...!

மலராய் என் மனதில் அவள்
வரமாய் பதிந்தாள். தினம்
சுகமாய் என்னுள் சுரந்தாள்.


அவளின் சாயல்


சாலையோரம் உன் 
சலங்கையின் கீதம். என் 
காதினூடே கவலையின் நீக்கம்
மாலை மேகக் கூட்டம் உன்
மடியினில் நான் தலைசாயும்
கோலம்.....!

அந்திவானம் உன் அழகின் சாயல்
பிந்திப்போனால் பிரினவின் சோகம
மங்கிப்போன இருளில் உன்
மகிமைக் கோலம் என் மனதை
அள்ளும் அருமைக்காலம்.

நிலவின் சாயல் உன் நெற்றி
நிகழ்காலம் அதுவே வெற்றி.
முதுமைக்காலம் முன்னே
உன் மகிமை வேண்டும் பெண்ணே....இனி
இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம்
உன் விழிகள் காணும் அவைகள் சொல்ல

எதுகைமோனை கொண்டேன்
எதிலும் உன்னைக்கண்டேன்
அதிலும் கூடக்கண்டேன்
உன் அழகின் பெருமைதன்னை...!


என் தாரகையே

மேகத்தின் சாயலில் 
மறைந்திருக்கும் உன்
மோகத்தால் என்
தேகம் சிலிர்க்குதடி...!

தாகம் தீர்க்கும் தடாகமோ _நீ
எனை தானம் கொண்ட தாரகையே.
ஞானம் பிறக்குதடி..என்னவளே உன்
நாணம் காண்கையில்.

வானம் சிவக்கும் மாலை. நீ
என் வாசல் வந்த பாவை.
சோலை வனம் கொண்ட உன் 
தோகை. அதில் சரமாலை அணியும்
சேவகனோ நான்.
வாகை சூடும் நேரமாச்சு இனி என் 
வாழ்வினிலும் சாரமாச்சு.
நாளி போகுதடி என் இதயமும்
நழுவுதடி..


கோடைகாலம்


கோடைகாலம் பிறந்தாச்சு
ஆடைகளும் குறைந்தாச்சு
மாடல் என்ற பேரில் எம்
மண்வாசமும் போயாச்சு

ஊரைவிட்டு வந்தோமடா
கோடைகாலம் வந்தால் எம்மை
ஊருக்கே இழுக்குதடா.... இங்கு
வாடை இன்றி போனாலும் தினம்
வாசனைத் திரவியம் கேட்குதடா

ஏரியில்லா ஊரானாலும் நல்
ஏசிபோல காற்றெடுக்க நல்
மரம்தான் அங்குண்டு. இங்கு
காற்றெடுக்க கடற்கரை போனால்
கரைநெடுகே.......!

உறுதியெடுத்துக் கொள்வோம். நீர்
ஊற்றெடுக்கும் எம்மூரில் தினம்
கழித்திடுவோம் கோடையென்னும்
விடுமுறையை......!



மே நாள்



Views 393

உழைத்திடும் மக்கள் 
ஓய்ந்திடும் நாளே?.. அன்றி 
ஓய்ந்திடா உழைத்திட நாம் 
உறுதி கொள்ளும் நாளே


என் கிராமத்துத்தாயே!

என் கிராமத்து தாயே .!சரஸ்வதியே
58வது அகவையில்
கால் பதிக்கும் உன்னை
போற்றி புகழஎன்னிடத்தில்
வார்த்தை இல்லை..!

ஏட்டைப்புரட்டி எழுதுகின்றேன் தாயே..!
என்னை ஏற்றி வைத்த ஏணி நீ
ஏந்தி நிற்பேன் உன்னினைவை
தினம் என் நாளில் ........!

எல்லோர்க்கும் மடி கொடுத்தாய்
தலை சாய்ந்து துயில் கொள்ள.
செடிமலர் தந்து கை பதிக்க வைத்தாய் அன்று.!
இன்று உன் கொடி வந்த
சுவிஸ் கிளையில் தலை நிமிர்நது நின்றேன்
முற்றத்து மலர் என்னும் கவிமலர் தூவி...!

அடி வைத்த இடமெல்லாம்
முடிவில்லா பயணமாகின்றது
என் முயற்சிக்கு நீதான் துணை.
கொடிவிட்டு மலர்களாய்
பரணியெங்கு நாம் பரந்தாலும்
உன் குடையின் கீழ் ஒன்றாக நடைபயின்று.
தரணிபோற்றும் படி
தினம் துதிப்போம் உன் நாமமதை.

எழுதவைத்தாய் பேசவைத்தாய்
தலைமைதுவம் எப்படியென்று
தவறாமல் கற்ப்பித்தும் விட்டாய்.
ஒற்றுமையே எம் பலமென்று நீ
தினம் எடுத்துரைத்தாய்.
தாழ் பணிந்து வணங்குகின்றேன் தாயே
உன் தலைசிறந்த வழிகாட்டலுக்கு..

முடியவில்லையம்மா என்னால்
உன் அகமகிழ்ந்த அகவைதனில்
நானும் கலந்து முகம் மலர்நது கொள்ள.
முயற்சிக்கின்றேன் தினம்
மீண்டும் ஒரு அகவைதனில்
நானும் அழாவிக்கொள்ள.

போற்றி புகழ்ந்தாலும் போதாதம்மா
நீ எமக்கு போதித்த போதனைக்கு ஈடு.
நாடு கடந்தாலும் தினம்
நாவில் உன் உச்சரிப்புத்தான்
வாழ்த்துகின்றேன் தாயே ....
மீண்டும் உன்னை வணங்கி......



நினைவாக


உன் காதோரம் வருடும் கூந்தலோடு
கவிபாட எண்ணுகின்றேன்...பெண்ணே!
உன் நினைவோடு வாழும்
மன்னவனும் நானே.....!
குயில் பாடும் குரலேதும் கேளேன் நீ
குரைத்தாலும் அது இசையாகும் தேனாய்....

கவியாலே உனைப்பாட இயலா தினம்
கவியாக நீ வாழ்கின்றாய் என் உயிராய்.
மலராக உன்னைக்காண வேண்டும் தினம்
உன் மனதோடு நான் உரையாட வேண்டும்.


My Blog List

Total Pageviews