Saturday, 30 November 2013

ஊரின் நினைவு

                                                               ஊரின் நினைவு


கனவுகள் துரத்த‌
தூக்கம் மறுக்க. உன் 
நினைவுகளோடு....என் 
நெஞ்சில் ஏக்கம் மட்டும்
எஞ்சின.....

உன்னை பிரிந்த சோகம்
மாறாதவடுவாகிப்போனாலும்
உன் நினைவுகள்.... 
என்றும் வற்றாத நீர்தான்.

பனைமரக்காற்றே..
கடல்வெளி ஊற்றே..
சுடுமணல் தரையே..
கொண்டல் பூவே..
கோவைப்பழ்மே..
உம்மோடு பழகிய காலம் எதுவோ.
அதுவே... அதுவே...

ஆடே மாடே கோழியே.. நீர்
அஃர்திணை பொருளாய் ஆனாலும் 
உயிர் தரும் மூச்சின் 
அன்பின் அடையாளமே.

தெருவோரக்கடைகளும்
தெருமுனைக்கிணறும்
வருவோர் கூடமும்
வாசகர் சலையும்
விளையாடும் வீரர் எம்
விளையாட்டு திடல்களும்
மறந்திடத்தான் முடியுமோ. தினம்
மடியினிலே சுமக்கின்றேன்.

ஆலையமணிகளின் ஓசையும்
அங்கே நடந்திடும் பூசையின் விதிகளும்
நம் வாழ்வு மிளிர்ந்திட கேட்டிடும்.
அங்கு புலர்ந்திடும் பொழுதே
எம்மை மலர்ந்திடச்செய்திடும்.
இங்கு ஒளிர்ந்திடாச்சூரியன்
தினம் மலர்ந்திடச்செய்திடும்
எம் ஊரின் நினைவுகளை..

என்றும் அன்புடன்
உங்கள் றொபின்சியா

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews