Friday, 29 November 2013

என் தேனமுதே..



அன்பே.........
என் வீட்டு மொட்டைமாடியில்
உனக்காக நான் காத்திருந்தேன்.
மணம் வீசும் தென்றலாய்.....
பெண்மயில் போல நீ
இடைமீது குடத்தோடு. உன்
கண்விழியின் ஒளி என்மீதுபட
வெண்தாமரைபோல்
உன்வீட்டு முற்றத்தில் நின்றாய்.
கள்ளழகியே உன் மெல்லொளி
என்மெய்யுருவில் பட்டதால்
பனிமூடலின் மோகமெல்லாம்
என்னை மூட பயந்துநின்றன.
உன்கருங்கூந்தல் தோகை உன்
பின்மேனியூடு தொடைதூரம் செல்வதைக்கண்ட
கார்மேகக்கூட்டமெல்லாம்
வெக்கிக் கலைந்தே செல்லுதடி.
மொட்டவிழ்ந்த பூக்களெல்லாம்
தம்முள் முட்டிமோதிக் கொள்ளுதடி.
கட்டழகு மேனியோடு அங்கு
இள வட்டழகி நீ வாசலிலே நின்றதனால்.
கண்விழித்த  கதிரவன்கூட
மெல்லக்கலக்கத்தோடு மேலெழுந்தான்
கள்ளச்சிரிப்பழகோடு நீ அங்கு
சூரியகாந்திப்பூப் போல நின்றதனால்.
தேனெடுக்கும் தேனியெல்லாம்
தேன்ராகம் பாடிக்கொண்டு
என் தேனமுதைத் தேடுகின்றது.
தேனமுதே..............
அவை உன்னைத்தீண்ட முன்
நீ ஓடிவந்து என்னுள் உறைந்துவிடடி..

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews