வாழ்விழந்து வகையிழந்து
வங்கக்கடல் தாண்டி. இங்கு
வந்தேறி விட்டோம்.
வழியின்றி விழிக்கின்றோம்
மொழியன்றி தவிக்கின்றோம்
போராலே இங்கு வந்தோம்
போர்வைக்குள் இங்கு இருக்கின்றோம்.
சொந்தங்கள் கூடி
சுகமாக வாழ்ந்த எம் நாடு
எந்நாழும் சொர்க்கம்தான். எமக்கு
இங்கு பந்தங்கள் பிடித்து
பணங்கள் குவித்தாலும் தினம்
நெஞ்சங்கள் குமுற....
நொய்ந்துதான் போகின்றோம்.
மண் கொண்டு அங்கே
சிறு மனையொன்று செய்து
மனம்மகிழ மல்லாக்கப்படுத்தாலும்
மறுபேச்சுப்பேச அங்கே யாரேதுமில்லை.
பெரு மனையிங்கு இருந்தாலும்
மனம்மகிழ்ந்து இருக்க
மனம்கூட இல்லை. ஏனெனில்
மாடாய் உழைத்து மாண்டுநாம் போகின்றோம்.
மானங்கள் போகுது
மனசும்தான் நோகுது
என் மண்ணில் போய் வாழ
என்மனமும்தான் தினம் ஏங்குது..
வங்கக்கடல் தாண்டி. இங்கு
வந்தேறி விட்டோம்.
வழியின்றி விழிக்கின்றோம்
மொழியன்றி தவிக்கின்றோம்
போராலே இங்கு வந்தோம்
போர்வைக்குள் இங்கு இருக்கின்றோம்.
சொந்தங்கள் கூடி
சுகமாக வாழ்ந்த எம் நாடு
எந்நாழும் சொர்க்கம்தான். எமக்கு
இங்கு பந்தங்கள் பிடித்து
பணங்கள் குவித்தாலும் தினம்
நெஞ்சங்கள் குமுற....
நொய்ந்துதான் போகின்றோம்.
மண் கொண்டு அங்கே
சிறு மனையொன்று செய்து
மனம்மகிழ மல்லாக்கப்படுத்தாலும்
மறுபேச்சுப்பேச அங்கே யாரேதுமில்லை.
பெரு மனையிங்கு இருந்தாலும்
மனம்மகிழ்ந்து இருக்க
மனம்கூட இல்லை. ஏனெனில்
மாடாய் உழைத்து மாண்டுநாம் போகின்றோம்.
மானங்கள் போகுது
மனசும்தான் நோகுது
என் மண்ணில் போய் வாழ
என்மனமும்தான் தினம் ஏங்குது..
No comments:
Post a Comment