Friday, 29 November 2013

உன்னோடு பயணிக்க வேண்டுமடி

அசைந்தாடும் தேரோ.
ஆகாய வெண்நிலவோ.
மெருண்டோடும் பெண்மானோ.
மயிலே.............
உன்மாயை எனக்குப்புரியவில்லையடி.
 
மணம் வீசும் தென்றலோ.
வளைந்தோடும் நதியோ.
மெல்லிசை கொண்டு
பாடும் குயிலோ.
பனி மழை தூவும் கரு மேகமோ.
என் கண்ணில் படா
கானல் நீரோடி நீ.
 
என் கவிக்குள்
அடங்கா கயல்விழியே.
என் நெஞ்சை
கொள்ளை கொண்ட கள்ளியே.
காலம் பூராவும் நான்
உன்னோடு பயணிக்க வேண்டுமடி.

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews