Friday, 29 November 2013

துடிக்குதடி என்மனது

நீதுள்ளி விளையாடிய
பள்ளிப்பருவம் என்னை
துவள வைத்ததடி. உன்
பொன்முகவழகில் முத்தமிட
என் உதடு துடிக்குதடி. உன்
கிளி மூக்கில் கிள்ளி விளையாட
என் கரம் துடிக்குதடி.
 
செருகிய மல்லிகை மொட்டாய்
சிரிக்கும் உன் சிரிப்பழகு
என்னை மயக்குதடி. உன் 
கன்னத்தை கொஞ்சும்
கருங்கூந்தலை என்
கைவிரலால் கோத 
என் மனம் துடிக்குதடி.
 
உன் மெல்லிடை சுற்றி
மேனியைப்போர்த்திய சேலை போல
நானிருக்க என்மனம் ஏங்குதடி.
நீ நடக்கையில் மண்ணில்
உன் பாதம் பட
என் மனம் நோகுதடி.
மொத்தத்தில் உன்னோடு நானிருக்க
எந்நாளும் என்மனம் துடிக்குதடி.

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews