இளங்காலைத் தென்றலோடு
இசையொன்று மீட்டிருந்தேன்.
இனியவளே உன் இதயத்தில்
இதமாய் நான் குடிகொள்ள.
இசையொன்று மீட்டிருந்தேன்.
இனியவளே உன் இதயத்தில்
இதமாய் நான் குடிகொள்ள.
என் இருவிழி கொண்டு உன்
மெய்யுரு பார்த்து மேனிசிலிர்த்தேன்.
அவ்விழி உன்னில் அன்பு கொண்டதால்
என் விழி மூடி உன்னிடம் வீழ்ந்தேன்.
மெய்யுரு பார்த்து மேனிசிலிர்த்தேன்.
அவ்விழி உன்னில் அன்பு கொண்டதால்
என் விழி மூடி உன்னிடம் வீழ்ந்தேன்.
சத்தங்கள் எல்லாம் சங்கீதமாகின.
சங்கதியெல்லாம் உன்கதிபாடின.
சுருதிகூட சுகமாய் மீட்டது.
சுந்தரியே.......உன்னால் சுகம் கண்டேனடி.
சங்கதியெல்லாம் உன்கதிபாடின.
சுருதிகூட சுகமாய் மீட்டது.
சுந்தரியே.......உன்னால் சுகம் கண்டேனடி.
வாழும் நாளில் உன்னோடு நான்
வசந்தங்கள் வகையின்றிப்பாடி
வையத்தில் வானுயரப்பறந்து
உன்மடியில் சாயவேண்டுமடி.
வசந்தங்கள் வகையின்றிப்பாடி
வையத்தில் வானுயரப்பறந்து
உன்மடியில் சாயவேண்டுமடி.
No comments:
Post a Comment