Friday, 29 November 2013

என் மனம் ஏங்குதடா

அன்பாகப்பேசி
என்னுள் ஆசையை வளர்த்து
தினம் என்னைக் கொல்லுகின்றாயடா
என் நெஞ்சைக் கொள்ளைகொண்டவனே
 
உன் மாய லீலைக்குள்
என்னை மயங்க வைத்ததால்
கோடி மக்களில் நீ மன்மதனடா
உன்னை காண என் மனம் ஏங்குதடா
 
நான் எட்டிப் பார்க்கும் இடமெல்லாம்
உன் சுட்டிக் குணம்தான் தோன்றுதடா
நீ எட்டி நின்று பேசினாலும்
என்னைக் கட்டியணைப்பது போல தோன்றுதடா
 
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டவனே
என்னை எப்போது அள்ளிக்கொள்ளப் போகின்றாயடா
உன்னைக்காண எண்ணுகையில் என்
கால்கள்கூட துள்ளிக் குதிக்குதடா...

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews