Friday, 29 November 2013

உன்னைச் சுமப்பேனடி

தேவி உன்னைக்காண்கையில் என்
தேகம் சிலிர்க்குதடி.
தேடும் இடமெல்லாம் உன்
ஞாபகங்கள் தேங்குவதால். தினம்
என்நிலை தடுமாறுதடி.
நான் ஆறியமருகையில்
அந்தரத்தில் பறப்பதுபோலுள்ளதடி.
என் அன்னக்கிளியே....
இறைவனிடம் கேட்டேன் ஓர்வரம்
என் கருவறையில் உன்னைச்சுமக்க.
அவன் கொடுத்தால்..
நிச்சயம் என் கல்லறைவரை
உன்னைச் சுமப்பேனடி.

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews